search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி - 91 பேருக்கு தொற்று

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று 91 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 127 பேர் கொரோனா ெதாற்றில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

    தற்போது 560 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 929 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் நேற்று 2,816 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×