search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    ஓசூரில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் மோதிரம், வெள்ளிப்பொருட்கள் திருட்டு

    ஓசூரில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் மோதிரம், வெள்ளிப்பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூரில், கருடா லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 30). தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர், மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 4 கிராம் தங்க மோதிரம் மற்றும் 20 கிராம் வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×