என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருவத்தூரில் மின்மோட்டார் பழுதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
Byமாலை மலர்19 Jun 2021 12:20 PM GMT (Updated: 19 Jun 2021 12:20 PM GMT)
மருவத்தூரில் மின்மோட்டார் பழுதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தை அடுத்த மருவத்தூர் ேபாலீஸ் நிலையம் அருகே உள்ள புது காலனியில் சுமார் 400 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைத்து, அதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த குடிநீர் தொட்டி புது காலனியில் உள்ள மக்களும், மருவத்தூர் கிராம மக்களும் பயன்படும் வகையில் இருந்தது. இந்நிலையில் இந்த தொட்டியின் மின் மோட்டார் பழுது அடைந்தது. 3 மாதங்களுக்கு மேலாகியும் மின் மோட்டார் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுவதோடு, வேறு பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், இதுவரை சரி செய்யப்படவில்லை. எனவே இனியும் தாமதிக்காமல் பேரளி ஊராட்சி நிர்வாகம் பழுதாகி உள்ள மின் மோட்டாரை உடனடியாக சரி செய்து, குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X