என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரத்தில் இருந்து தவறி கிணற்றில் விழுந்த தையல் தொழிலாளி உயிரிழப்பு
Byமாலை மலர்19 Jun 2021 11:13 AM GMT (Updated: 19 Jun 2021 11:13 AM GMT)
தையல் தொழிலாளி குடிபோதையில் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்த மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறியதாகக் கூறப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த பண்டிதபட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34),தையல் தொழிலாளி. இவர் குடிபோதையில் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்த மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர் மரத்தில் இருந்து தவறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்தார். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப்படை வீரர்கள் கிணற்றில் தவறி விழுந்த சுரேசை பிணமாக மீட்டனர்.
அவரின் உடலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த பண்டிதபட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34),தையல் தொழிலாளி. இவர் குடிபோதையில் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்த மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர் மரத்தில் இருந்து தவறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்தார். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப்படை வீரர்கள் கிணற்றில் தவறி விழுந்த சுரேசை பிணமாக மீட்டனர்.
அவரின் உடலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X