என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய பெண் உயிரிழப்பு

    அருப்புக்கோட்டையில் பூஞ்சை நோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்துகள் இல்லாததால் பொன்மணி மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி பொன்மணி (வயது 70). இவர் கடந்த மாதம் 30-ந் தேதி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.

    மருத்துவர் சோதித்ததில் இவருக்கு பூஞ்சை நோய் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அருப்புக்கோட்டையில் இந்த நோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்துகள் இல்லாததால் அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 17 நாட்கள் சிகிச்சை முடிந்து அருப்புக்கோட்டை திரும்பிய அந்த பெண் நேற்று இரவு திடீரென வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

    வீடு திரும்பிய பெண்மணி திடீரென உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    Next Story
    ×