என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்18 Jun 2021 10:43 AM GMT (Updated: 18 Jun 2021 10:43 AM GMT)
மாயனூர் கதவணைக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. கடல்போல் காட்சியளிக்கும் அணையை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.
கிருஷ்ணராயபுரம்:
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு கடந்த 14-ந்தேதி அதிகாலை வரத்தொடங்கியது. அன்று கதவணைக்கு வினாடிக்கு 4000 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்ததை அப்படியே காவிரியில் திறக்கப்பட்டது.
பின்னர் 15-ந்தேதி அன்று கதவணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இப்படியாக இந்த கதவணைக்கு தண்ணீர் படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இதையடுத்து இந்த தண்ணீரை அப்படியே காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அணை கடல்போல் காட்சியளிக்கிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு கடந்த 14-ந்தேதி அதிகாலை வரத்தொடங்கியது. அன்று கதவணைக்கு வினாடிக்கு 4000 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்ததை அப்படியே காவிரியில் திறக்கப்பட்டது.
பின்னர் 15-ந்தேதி அன்று கதவணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இப்படியாக இந்த கதவணைக்கு தண்ணீர் படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இதையடுத்து இந்த தண்ணீரை அப்படியே காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அணை கடல்போல் காட்சியளிக்கிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X