search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயனூர் கதவணை
    X
    மாயனூர் கதவணை

    மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    மாயனூர் கதவணைக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. கடல்போல் காட்சியளிக்கும் அணையை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.
    கிருஷ்ணராயபுரம்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு கடந்த 14-ந்தேதி அதிகாலை வரத்தொடங்கியது. அன்று கதவணைக்கு வினாடிக்கு 4000 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்ததை அப்படியே காவிரியில் திறக்கப்பட்டது.

    பின்னர் 15-ந்தேதி அன்று கதவணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இப்படியாக இந்த கதவணைக்கு தண்ணீர் படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

    இதையடுத்து இந்த தண்ணீரை அப்படியே காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அணை கடல்போல் காட்சியளிக்கிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.
    Next Story
    ×