என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை பா.ஜனதா அலை தமிழகத்திலும் அடிக்கும் - எல்.முருகன்
Byமாலை மலர்16 Jun 2021 3:15 PM GMT (Updated: 16 Jun 2021 3:15 PM GMT)
பா.ஜ.க. தமிழகத்தில் வரவே முடியாது, தாமரை மலராது என்று சொன்னார்கள். தற்போது தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர் என எல்.முருகன் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சபாநாயகர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்மண்ணில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளதற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
பா.ஜ.க. தமிழகத்தில் வரவே முடியாது, தாமரை மலராது என்று சொன்னார்கள். தற்போது தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பா.ஜ.க. பெற்று வருகிறது.
தமிழ் மண்ணான புதுவையில் தற்போது தாமரை மலர்ந்துள்ளது.புதுவையில் வந்துள்ள பா.ஜ.க.வின் அலை தமிழகத்திலும் வரும். மதுகடைகளை மூடுவோம் என்று சொல்லித்தான் தி.மு.க. வெற்றி பெற்றது.
ஆனால் தற்போது கடைகளை திறந்துள்ளனர். கருத்துகள் சொல்பவர்கள் மீது வழக்குப்பதிவு என்பது கண்டிக்கதக்கது. அனைத்து சமுதாயத்தினரும் பல கோவில்களில் அர்ச்சகராக உள்ளனர்.
இது ஏற்கனவே உள்ள நடைமுறைதான். சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் என்பது தனி மனிதனின் குற்றம். இதற்காக நிர்வாகத்தை குறைகூற முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X