என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்16 Jun 2021 10:11 AM GMT (Updated: 16 Jun 2021 10:11 AM GMT)
வேலூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வேலூர்:
வேலூர் சின்னஅல்லாபுரம் கே.கே.நகர் திரவுபதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாகர் (வயது 25), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 12-ந்தேதி இரவு வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உறங்க சென்றார். அவர் மறுநாள் காலையில் பார்த்தபோது அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து கிருஷ்ணசாகர் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சித்தேரி கூட்ரோட்டில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், நரசிம்மன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் கிருஷ்ணசாகரின் திருட்டுபோன மோட்டார் சைக்கிள் என்று தெரியவந்தது. போலீசார் விசாரணையில், அவர்கள் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த முகமதுயாசின் (20), ரகீம் (21), பகத்பாஷா (21) என்பதும், மோட்டார் சைக்கிளை 3 பேரும் சேர்ந்து திருடியதும் தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
வேலூர் சின்னஅல்லாபுரம் கே.கே.நகர் திரவுபதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாகர் (வயது 25), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 12-ந்தேதி இரவு வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உறங்க சென்றார். அவர் மறுநாள் காலையில் பார்த்தபோது அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து கிருஷ்ணசாகர் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சித்தேரி கூட்ரோட்டில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், நரசிம்மன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் கிருஷ்ணசாகரின் திருட்டுபோன மோட்டார் சைக்கிள் என்று தெரியவந்தது. போலீசார் விசாரணையில், அவர்கள் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த முகமதுயாசின் (20), ரகீம் (21), பகத்பாஷா (21) என்பதும், மோட்டார் சைக்கிளை 3 பேரும் சேர்ந்து திருடியதும் தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X