search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செவல்பட்டி பகுதியில் நன்கு விளைந்த சூரியகாந்தி பூக்கள்.
    X
    செவல்பட்டி பகுதியில் நன்கு விளைந்த சூரியகாந்தி பூக்கள்.

    வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் சூரியகாந்தி விளைச்சல் அமோகம்- விவசாயிகள் மகிழ்ச்சி

    வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் சூரியகாந்தி விளைச்சல் அதிகமாக இருப்பதாலும் விலை உயர்ந்து இருப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் மக்காச்சோளத்துக்கு அடுத்தபடியாக சூரியகாந்தி அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது சக்கம்மாள்புரம், சிப்பிபாறை, செவல்பட்டி, குண்டம்பட்டி, முக்கூட்டு மலை, கஸ்தூரிரெங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தியை விவசாயிகள் பயிரிட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சூரியகாந்தியை அறுவடை செய்யும் பணியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இந்த பகுதியில் கிணற்றில் உள்ள தண்ணீரை கொண்டு சூரியகாந்தி சாகுபடி செய்தோம்.

    கடந்த காலங்களில் மழை பெய்ததால் நாங்கள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. அதாவது சென்ற சாகுபடியின் போது ஒரு ஏக்கருக்கு 3 குவிண்டால் தான் சூரியகாந்தி பூக்கள் கிடைத்தன. தற்போது நல்ல விளைச்சல் உள்ளது. ஏக்கருக்கு 5 குவிண்டால் வரை கிடைக்கிறது.

    அதேபோல தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் இந்த சமயத்தில் குவிண்டாலுக்கு ரூ.6000 வரை விற்பனையாகிறது.

    ஆனால் சென்ற ஆண்டு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,500 வரை மட்டுமே விலை கிடைத்தது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மகசூலும் அதிகம். விலையும் அதிகம். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்ததால் நாங்கள் மகிழ்ச்சியில் உள்ளோம்.

    இந்த பகுதியில் இருந்து சூரியகாந்தியானது ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×