search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

    அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மணியின் மகன் சுரேஷ்(வயது 28). இவர் மேலூர் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள்(60) என்பவருடன் சென்று, திருச்சி அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது உறவினரை பார்த்துவிட்டு திரும்பினார். திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் அவர்கள் வந்தனர். பூண்டி பிரிவு பாதை அருகே வந்தபோது எதிரே ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் உயிரிழந்தார். கலியபெருமாள் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×