search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிஷீல்டு தடுப்பூசி
    X
    கோவிஷீல்டு தடுப்பூசி

    தமிழகத்திற்கு இன்று மாலை 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன

    தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை வரை 97.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
    தமிழகத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை வரை மத்திய அரசு ஒதுக்கீடு, மாநில அரசு கொள்முதல் ஆகியவை மூலம் 1.01 கோடி தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. இதில் 97.5 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டு விட்டன. ஜனவரி 2021-ல் இருந்து சுமார் 3 லட்சம் டோஸ்கள் வீணாகியுள்ளது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெறாமல் உள்ளது.


    இந்த நிலையில் இன்று 3.65 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் இருந்து சென்னைக்கு வந்தடைந்தன. இந்த டோஸ்கள் மாவட்டம் வாரியமாக பிரித்து அனுப்பப்படும்.
    Next Story
    ×