search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகனங்கள் பறிமுதல்
    X
    வாகனங்கள் பறிமுதல்

    ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 262 வாகனங்கள் பறிமுதல்

    ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றியும், இ-பதிவு இல்லாமலும் வரும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோடுகளிலும் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றியும், இ-பதிவு இல்லாமலும் வரும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி ரோடுகளில் வாகனங்களில் சுற்றியவர்கள் 295 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 245 இரு சக்கர வாகனம் மற்றும் 17 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 262 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×