search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா 2-வது அலையில் 4,719 சிறுவர்கள் பாதிப்பு

    கொரோனா 3-வது அலையில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா 2-வது அலையில் அதிகளவு சிறுவர்கள் பாதிக்கப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

    வீடுகளில் பெரியவர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று வீட்டில் உள்ள குழந்தைகள், சிறுவர்களுக்கும் பரவியது.

    கடந்த ஜனவரி முதல் ஜூன் 6-ந் தேதி வரை 6 மாத காலத்தில் 12 வயதுக்குட்பட்ட 2 ஆயிரத்து 353 சிறுவர்களுக்கும், 12 வயது முதல் 17 வயது வரை உள்ள 2 ஆயிரத்து 366 சிறுவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒட்டுமொத்தமாக கடந்த 6 மாதத்தில் 17 வயதுக்குட்பட்ட 4 ஆயிரத்து 719 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் பெரும்பாலான சிறுவர்கள் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர்.

    இப்போது கொரோனா 3-வது அலையில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ராஜீவ்காந்தி குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×