search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி
    X
    வீராணம் ஏரி

    மேட்டூர் அணை 12ந்தேதி திறப்பு- வீராணம் ஏரிக்கு இந்த மாதத்துக்குள் தண்ணீர் வர வாய்ப்பு

    வீராணம் ஏரிக்கு அரியலூர், பெரம்பலூர் பகுதியில் பருவமழை காலத்தில் தண்ணீர் வரும். அதோடு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வடவாறு வழியாக வந்து சேருகிறது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

    இந்த ஏரி மூலம் 45.856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    இந்த ஏரியில் இருந்து குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரிக்கு அரியலூர், பெரம்பலூர் பகுதியில் பருவமழை காலத்தில் தண்ணீர் வரும். அதோடு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வடவாறு வழியாக வந்து சேருகிறது.

    தற்போது வீராணம் ஏரியை மராமத்து பணிக்காக அங்குள்ள தண்ணீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. கடந்த 2 மாதமாக பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது.

    வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. எனவே, பராமரிப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் வீராணம் ஏரிக்கு இந்த மாத இறுதிக்குள் வந்து சேரும். அதன் பின்னர் சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்படும். விவசாயத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு பணிகள் நடைபெறும் என்றனர்.
    Next Story
    ×