என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணை 12ந்தேதி திறப்பு- வீராணம் ஏரிக்கு இந்த மாதத்துக்குள் தண்ணீர் வர வாய்ப்பு
Byமாலை மலர்10 Jun 2021 8:00 AM GMT
வீராணம் ஏரிக்கு அரியலூர், பெரம்பலூர் பகுதியில் பருவமழை காலத்தில் தண்ணீர் வரும். அதோடு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வடவாறு வழியாக வந்து சேருகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.
இந்த ஏரி மூலம் 45.856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.
இந்த ஏரியில் இருந்து குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரிக்கு அரியலூர், பெரம்பலூர் பகுதியில் பருவமழை காலத்தில் தண்ணீர் வரும். அதோடு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வடவாறு வழியாக வந்து சேருகிறது.
தற்போது வீராணம் ஏரியை மராமத்து பணிக்காக அங்குள்ள தண்ணீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. கடந்த 2 மாதமாக பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது.
வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. எனவே, பராமரிப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் வீராணம் ஏரிக்கு இந்த மாத இறுதிக்குள் வந்து சேரும். அதன் பின்னர் சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்படும். விவசாயத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு பணிகள் நடைபெறும் என்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.
இந்த ஏரி மூலம் 45.856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.
இந்த ஏரியில் இருந்து குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரிக்கு அரியலூர், பெரம்பலூர் பகுதியில் பருவமழை காலத்தில் தண்ணீர் வரும். அதோடு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வடவாறு வழியாக வந்து சேருகிறது.
தற்போது வீராணம் ஏரியை மராமத்து பணிக்காக அங்குள்ள தண்ணீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. கடந்த 2 மாதமாக பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது.
வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. எனவே, பராமரிப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் வீராணம் ஏரிக்கு இந்த மாத இறுதிக்குள் வந்து சேரும். அதன் பின்னர் சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்படும். விவசாயத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு பணிகள் நடைபெறும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X