search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 193 பேருக்கு கொரோனா

    அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 193 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 193 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,892 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 144 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 10,698 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது மொத்தம் 2,050 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.

    நேற்று மொத்தம் 1,110 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதித்த மொத்தம் 59 பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 186 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×