search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபசுர குடிநீர்
    X
    கபசுர குடிநீர்

    நிம்மேலி ஊராட்சியில் கபசுர குடிநீர் வினியோகம்

    தமிழகத்தில் கொரோனா வைரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மத்திய, மாநில அரசுகள் 2-ம் கட்ட ஊரடங்கை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
    சீர்காழி:

    தமிழகத்தில் கொரோனா வைரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மத்திய, மாநில அரசுகள் 2-ம் கட்ட ஊரடங்கை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இருந்தபோதிலும் சீர்காழி பகுதியில் வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நிம்மேலி ஊராட்சி சார்பில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி கிருபாகரன், நிம்மேலி, அரூர், தத்தங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று கபசுர குடிநீர் தொடர்ந்து வழங்கி வருகிறார். மேலும் ஊராட்சி தோறும் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×