search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கீழ்பென்னாத்தூரில் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது

    கீழ்பென்னாத்தூரில் வழிப்பறி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் அங்குள்ள டீக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு முருகன் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது எதிரில் ஆட்டோவில் வந்த 2 வாலிபர்கள், முருகனை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர் பாக்கெட்டில் வைத்திருந்த 1,000 ரூபாயை பறித்துக்கொண்டு ஆட்டோவில் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து முருகன் ஆட்டோ நம்பருடன் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து வழுதலங்குணம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் வினோத் என்ற பென்னி (வயது 22), வேடியப்பன் மகன் செல்வம் (21) ஆகிய இருவரையும் இன்ஸ்பெக்டர் சியாமளா, சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் ஆகியோர் கைது செய்தனர்.
    Next Story
    ×