என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி - மழை பெய்ததால் மரத்தடியில் ஒதுங்கியபோது பரிதாபம்
Byமாலை மலர்5 Jun 2021 2:47 PM GMT (Updated: 5 Jun 2021 2:47 PM GMT)
குன்னம் அருகே மழை பெய்ததால் மரத்தடியில் ஒதுங்கி நின்றபோது மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 55). விவசாயி. இவர் நேற்று மாலை பேரளியில் இருந்து பீல்வாடி செல்லும் சாலையில் பெரியாண்டவர் கோவில் அருகில், தனது ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் மழை பெய்தது. இதனால் ராமச்சந்திரன் அங்குள்ள மரத்தடியில் ஒதுங்கி நின்றார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X