search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் விற்பனை செய்வது குறித்து, வருவாய் ஆய்வாளர் அறிவுறுத்திய காட்சி
    X
    பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் விற்பனை செய்வது குறித்து, வருவாய் ஆய்வாளர் அறிவுறுத்திய காட்சி

    விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்க அறிவுறுத்தல்

    ஜெயங்கொண்டத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகளுக்கு தினமும் ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக பெட்ரோல் பெறுபவர்களின் விவரங்களை சேகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் அரியலூர் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அரசு விதிமுறைகளை மீறி பலர் வாகனங்களில் சுற்றித்திரிவதால், அவர்கள் வெளியே வருவதை தடுக்க வருவாய்த்துறை, காவல்துறை, நகராட்சி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இருசக்கர வாகனங்களில் வருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இந்நிலையில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஒரு நபருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்க வேண்டும். மேலும் ஒரு லிட்டருக்கு மேல் பெட்ரோல் தேவை என வலியுறுத்தி பெற்றுச் செல்லும் நபர்களின் பெயர், முகவரி ஆகியவை பெட்ரோல் விற்பனை நிலையத்தினரால் ெபறப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டும். அந்த விவரத்தை நாள்தோறும் தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கலெக்டர் ரத்னா உத்தரவிட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் ஜெயங்கொண்டம் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீமதி, ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தும், நேரில் சென்று தகவல் தெரிவித்தும் அறிவுறுத்தினார். மேலும் அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டுமே பெட்ரோல் விற்பனை செய்யப்பட வேண்டும். உள்ளூர் நபர்கள் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளுக்கு சொந்த தேவைக்காக சென்றுவர நாளொன்றுக்கு ஒரு லிட்டர் மட்டுமே பெட்ரோல் விற்பனை செய்யப்பட வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×