என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பர்கூர் அருகே விவசாயியை தாக்கியவர் கைது
Byமாலை மலர்31 May 2021 12:28 PM GMT (Updated: 31 May 2021 12:28 PM GMT)
பர்கூர் அருகே விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 20). இவர் பர்கூர் ஜெகதேவி பகுதியை சேர்ந்த அன்பு (23) மற்றும் அவர்களது நண்பர்களுடன் ஏ.நாகமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 28-ந் தேதி கிரிக்கெட் விளையாடினார். அப்போது ஏ.நாகமங்கலத்தை சேர்ந்த விவசாயி பழனிகுமார் (41) மற்றும் கிராமத்தினர் விளையாடி கொண்டிருந்தவர்களிடம் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூட்டமாக சேர்ந்து விளையாடுகிறீர்களே என்று கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் மற்றும் அன்பு உள்ளிட்டோர் கற்கள் மற்றும் கட்டைகள் கொண்டு பழனிகுமார் உள்ளிட்டோரை தாக்கினார்கள். இதில் படுகாயமடைந்த பழனிகுமார் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பர்கூர் போலீசார் அன்புவை கைது செய்தனர். வெங்கடேசை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X