என் மலர்
செய்திகள்

கைது
செந்துறை அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது
செந்துறை அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொட்டவெளி கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன்(வயது 36). இவர் தனது வீட்டில் சாராயம் விற்பதாக செந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, குருநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் சாராயம் காய்ச்சிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






