என் மலர்
செய்திகள்

கைது
பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:
விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் இடையப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, இரங்காடு புளியந்தோப்பில் தேன்கனியூரைச் சேர்ந்த பெருமாள் (வயது 38), ராஜேஷ், குமார் (38), ரவிச்சந்திரன் (40), மேடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ராமன் (33), வடக்கு மோத்தப்பட்டியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (26) உள்பட 10 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதில் பெருமாள் என்பவர் தப்பித்து ஓடிவிட்டார். மற்ற 9 பேரை பிடித்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு சொந்தமான 7 மோட்டார் சைக்கிள்கள், ரூ.27 ஆயிரத்து 150 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story






