search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவின் பால்
    X
    ஆவின் பால்

    கொள்ளிடத்தில் கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை- ஊரடங்கால் பாதித்த மக்கள் வேதனை

    பொது முடக்கத்தால் வேலைகளை இழந்து பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்யப்படுதால் ஏழை, எளிய மக்கள் பால் வாங்கி பருகுவதும் தடைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    சீர்காழி:

    தமிழக அரசு பொதுமக்களுக்கு தரமான பால் உரிய கட்டணம் நிர்ணயம் செய்து ஆவின் மூலம் விற்பனை செய்கிறது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் நிவாரணநிதி ரூ.2 ஆயிரம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அவ்வாறு ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைக்கப்பட்டு தற்போது தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

    சீர்காழி, புத்தூர், தைக்கால், வைத்தீஸ் வரன்கோவில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் பாலகம் உள்ளது. இதில் கொள்ளிடத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் அரை லிட்டர் ஆவின் பால் (புல்கிரீம்) பழைய விலை ரூ.25.50 என்ற அச்சடிக்கப்பட்டதினை கருப்பு ஸ்டிக்கர் மூலம் திருத்தி,புதிய குறைக்கப்பட்ட விலைபட்டியல்படி ரூ.24 என 28.5.21 என்று தேதியுடன் அச்சடிக்கபட்டுள்ளது. ஆனால் விற்பனையாளர் ரூ.24-க்கு விற்காமல் ரூ.27-க்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் 200 மிலி ஆவின் பால் எம்ஆர்பி ரூ.11 என இருந்தும் ரூ.13-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து அதிக விலைக்கு ஏன் பால் விற்பனை செய்கீறிர்கள் என வாடிக்கையாளர்கள் கேட்கும்போது பால் பாக்கெட்டுகளை கெடாமல் வைத்திட குளிர்விப்பான் பீரி‌ஷர் பயன்படுத்துவதால் மின்சார செலவிற்காக கூடுதல் விலை என ஆவின் விற்பனையாளர் கூறிவருகிறார்.

    தற்போது பொது முடக்கத்தால் வேலைகளை இழந்து பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் இவ்வாறு கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்யப்படுதால் ஏழை, எளிய மக்கள் பால் வாங்கி பருகுவதும் தடைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    தமிழக அரசு மக்களின் நிலை அறிந்து லிட்டருக்கு ரூ.3 விலை குறைத்தும் இவ்வாறு விற்பனையாளர்கள் தங்களுக்கு சாதகமாக பல காரணங்களை கூறி கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்வதால் அதன் அரசின் திட்டத்தின் பயன் மக்களிடம் சென்றடைவதில்லை.

    இதனை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து மாவட்டந்தோறும் ஆவின் பால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×