என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
கொரோனா நோயாளிகளுக்கு மனநல ஆலோசனை- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
கொரோனா பாதித்தவர்களுக்கு தொலைபேசி மூலம் மனநல ஆலோசனை வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை செயலாளர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் ரீதியான தொந்தரவுகளை கண்டறியவும், சரி செய்யவும் போதிய விழிப்புணர்வு மக்களிடையே உள்ளது.
அதேபோல் இந்த பெருந்தொற்று காலத்தில் மனதளவில் ஏற்படும் பாதிப்புகளை நாம் உதாசீனம் செய்துவிட முடியாது. மனநலனை பேணுவதற்காகவும் அதற்கான உதவிகளை எளிய முறையில் பெற தேசிய மனநல திட்டத்தின் கீழ் புதுச்சேரி மனநல துறையின் நிபுணர் குழு கலந்தாலோசித்தது.
அதன்படி இலவச தொலைபேசி எண் அமைக்கவும், கொரோனா நோயாளிகளை தொலைபேசி மூலம் அழைத்து மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த எண்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை அழைத்து மக்கள் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுவை சுகாதாரத்துறை செயலாளர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் ரீதியான தொந்தரவுகளை கண்டறியவும், சரி செய்யவும் போதிய விழிப்புணர்வு மக்களிடையே உள்ளது.
அதேபோல் இந்த பெருந்தொற்று காலத்தில் மனதளவில் ஏற்படும் பாதிப்புகளை நாம் உதாசீனம் செய்துவிட முடியாது. மனநலனை பேணுவதற்காகவும் அதற்கான உதவிகளை எளிய முறையில் பெற தேசிய மனநல திட்டத்தின் கீழ் புதுச்சேரி மனநல துறையின் நிபுணர் குழு கலந்தாலோசித்தது.
அதன்படி இலவச தொலைபேசி எண் அமைக்கவும், கொரோனா நோயாளிகளை தொலைபேசி மூலம் அழைத்து மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த எண்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை அழைத்து மக்கள் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






