என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    இளையான்குடியில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி

    இளையான்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் தொடர் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் தொடர் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் டி.வி., பிரிட்ஜ், மின்விசிறி உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் சேதம் அடைந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பொருட்கள் நஷ்டமும், மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்.

    இனிவரும் காலங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படாத வண்ணம் மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×