என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூரில் காய்கறி விற்பனை மந்தம்
Byமாலை மலர்26 May 2021 11:03 AM GMT (Updated: 26 May 2021 11:03 AM GMT)
அரியலூரில் நேற்று 5 கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.
அரியலூர்:
அரியலூரில் காய்கறி விற்பனை மந்தமாக இருந்தது. அரியலூரில் மொத்த காய்கறி கடைகளை திறந்து விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காலை 5 மணி முதல் 6 மணி வரை மினி லாரிகளில் காய்கறிகளை வாங்கி, தெருக்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கபட்டவர்களுக்கு மட்டும் காய்கறிகள் விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அங்கு நேற்று 5 கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. மந்தமாகவே இருந்தது.
மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் ஆதரவற்றவர்களுக்கு உணவுகள் வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி அரியலூர் உட்கோட்ட துணை சூப்பிரண்டு மதன், நரிக்குறவர்கள் தங்கி உள்ள இடத்திற்கு சென்று அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் வழங்கினார். இதேபோல் பஸ் நிலையம் மற்றும் சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X