என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
    X
    கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

    மயிலாடுதுறையில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.

    அதன் பேரில் மயிலாடுதுறை நகரில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது சிவன் மற்றும் எமதர்மன் வேடமணிந்த நாடக கலைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது சாலையில் முக கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த சிலரை நிறுத்தி அவர்கள் கழுத்தில் எமதர்மன் சுருக்குகயிறு வீசுவது போன்று சுருக்கு கயிறு அணிவித்து கொரோனா பரவலால் ஏற்படும் உயிரிழப்பு குறித்து பேசியதோடு நடித்தும் காண்பித்தனர்.

    தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் கொரோனா தொற்று பரவலை தடுக்க வேண்டுமானால் அனைவரும் முககவசம் அணிய வேண்டும், தேவையில்லாமல் வெளியில் சுற்றக் கூடாது என்று அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களுக்கு முகக்கவசங்களையும் போலீசார் வழங்கினர். இதேபோல பட்டமங்கலத்தெரு, பெரிய கடைத்தெரு சந்திப்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த கலை நிகழ்ச்சிகளில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×