என் மலர்
செய்திகள்

வேலூர் அருகே செல்போனில் கேம் விளையாடிய மாணவர்கள் 2 பேர் திடீரென தூக்கிட்ட பரிதாபம் - தம்பி பலி
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன்கள் ஹேமச்சந்திரன் (வயது 13), லோகேஷ் (15). அங்குள்ள தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஹேமச்சந்திரன் 8-ம் வகுப்பு, லோகேஷ் 10-ம் வகுப்பும் படித்தனர்.
கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பு நடப்பதால் ஹேமச்சந்திரன் மற்றும் அவரது அண்ணன் லோகேஷ் இருவரும் செல்போனில் பாடம் படித்து வந்தனர்.
சிவக்குமாருக்கு ஊரில் ஒரு வீடும். நிலத்தில் ஒரு வீடும் உள்ளது. அண்ணன்-தம்பி இருவரும் நிலத்தில் உள்ள வீட்டில் ஆன்லைன் மூலம் படித்து வந்தனர். மீதி நேரத்தில் இருவரும் ஒரே செல்போனில் ஆன்லைனில் கேம் விளையாடி வந்தனர்.
நேற்று மாலை 4 மணிக்கு 2 பேரும் ஆன்லைனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டில் இருந்த கயிரை எடுத்து ஹேமச்சந்திரன் வெளியிலுள்ள அறையிலும், லோகேஷ் உள்ளே இருந்த அறையிலும் தூக்கு மாட்டிக்கொள்வதற்கு முயற்சி செய்தனர்.
அப்போது ஹேமச்சந்திரன் உடனடியாக தூக்கில் தொங்கி இருக்கிறார்.இதனால் கழுத்து வலி தாங்கமுடியாமல் சத்தம் போட்டான். உடனே பக்கத்து அறையில் இருந்த லோகேஷ் ஓடிவந்து தம்பியை காப்பாற்ற முயற்சி செய்தான். மேலும் இது குறித்து தாய் ஜமுனாவுக்கு லோகேஷ் போனில் தகவல் தெரிவித்தான்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து தூக்கில் தொங்கிய ஹேமச்சந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை டாக்டர் பரிசோதனை செய்ததில் ஹேமச்சந்திரன் இறந்துவிடடது தெரியவந்தது. தம்பியை காப்பாற்ற வந்ததால் லோகேஷ் உயிர் தப்பியுள்ளார்.
அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






