என் மலர்
செய்திகள்

முககவசம்
முககவசம் அணியாமல் வந்த 20 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிப்பு
முககவசம் அணியாமல் பொருட்கள் வாங்க வந்த 20 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், இளநிலை உதவியாளர் மதியரசன், வரித்தண்டலர் கருணாநிதி உள்ளிட்ட அலுவலர்கள் பொறையாறு, தரங்கம்பாடி ஆகிய பகுதி கடைத்தெருவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பலர் முககவசம் அணியாமல் கடைகளில் பொருட்கள் வாங்க வந்தனர். .அவர்கள் காய்கனி கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறிய அதிகாரிகள், முககவசம் அணியாமல் பொருட்கள் வாங்க வந்த 20 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
Next Story






