என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பரங்கிப்பேட்டை அருகே நாயை சித்ரவதை செய்த 2 பேர் கைது

    கடலூர் வனவிலங்கு நல ஆர்வலர் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
    பரங்கிப்பேட்டை:

    பரங்கிப்பேட்டை அருகே உள்ள சக்கரை பள்ளி மண்டபம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன்(வயது 34). கொத்தனரான இவர், தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த நாய்க்கு தலையில் புண் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த நாயை ராஜேஷ் கண்ணன் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதை கயிற்றால் கட்டி ராஜேஷ் கண்ணன் மற்றும் அவருடைய நண்பர் செல்வராஜ் மகன் முத்துவேல்(36) தெருவில் இழுத்து சென்று சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இதனை முத்துவேல் செல்போனில் படமெடுத்து முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கடலூர் வனவிலங்கு நல ஆர்வலர் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மிருகவதை தடை சட்டத்தின் கீழ் முத்துவேல், ராஜேஷ்கண்ணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×