search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
    X
    நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி

    நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி

    ஆண்கள் மட்டுமே இயக்கி வரும் அறுவடை இயந்திரத்தை 10-ம் வகுப்பு மாணவி மீனா இயக்குவது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வந்தவாசி :

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆராசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயி. இவருடைய மனைவி காளியம்மாள். இவர்களின் மகள் மீனா. 10-ம் வகுப்பு மாணவி. ராமச்சந்திரன் நெல் அறுவடை எந்திரம் வைத்துள்ளார். தனது தேவைக்கு போக அறுவடை எந்திரத்தை வாடகைக்கு விட்டு வருகிறார். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் பள்ளிக்கு செல்லாத ராமச்சந்திரனின் மகள் மீனா, தனது அப்பாவுக்கு உதவியாக ஏர் ஓட்டுவது, தண்ணீர் இறைப்பது, நாற்று நடுவது உள்ளிட்ட பணிகளை செய்துவந்துள்ளார்.

    அதேபோன்று அறுவடைக்கு தயாராக இருந்த 3 ஏக்கர் நெற்பயிரையும் அறுவடை எந்்திரத்தை இயக்கி அறுவடை செய்து அசத்தி வருகிறார். பள்ளி, கல்லூரிகளில் விடுமுறையில் வீணாக ஊர் சுற்றும் மாணவர்கள் மத்தியில் ஆண்கள் மட்டுமே இயக்கி வரும் அறுவடை இயந்திரத்தை 10-ம் வகுப்பு மாணவி மீனா இயக்குவது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×