search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் மாவட்டத்துக்கு 4,500 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வருகை

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 12-ந் தேதி வேலூர் மாவட்டத்துக்கு 4 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. அவை 2-வது முறை தடுப்பூசி போடும் நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. தட்டுப்பாடு காரணமாக கோவேக்சின் தடுப்பூசிகள் வரவில்லை. அதனால் 2-வது முறை கோவேக்சின் தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்தவர்கள் அச்சம் அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று 2,500 டோஸ் கோவேக்சின், 2,000 டோஸ் கோவிஷீல்டு என்று மொத்தம் 4,500 தடுப்பூசிகள் வந்துள்ளன. கோவேக்சின் தடுப்பூசிகள் 2-வது முறை போடும் நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி 45 வயதுக்கு மேற்பட்ட மற்றும் முன்பதிவு செய்துள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×