என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,000 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்15 May 2021 12:35 PM GMT (Updated: 15 May 2021 12:35 PM GMT)
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மயிலாடுதுறை:
தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 14 போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி வியாபாரம் செய்த டீ கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட 30 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணம் செய்த 250 பேரிடம் அபராத தொகை ரூ.5 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள்களில் முக கவசம் அணியாமலும், ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்தவர்கள் என மொத்தம் 1,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X