search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பவானியில் தொழிற்சாலையில் மின்ஒயர் திருடிய 2 பேர் கைது

    தொழிற்சாலையின் உள்ளே இருந்து சத்தம் வந்ததை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தொழிற்சாலையின் உரிமையாளர் கண்ணையனுக்கு தகவல் கொடுத்தனர்.
    பவானி:

    பவானி புதிய பஸ் நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான சாயத் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த தொழிற்சாலையின் உள்ளே இருந்து சத்தம் வந்ததை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தொழிற்சாலையின் உரிமையாளர் கண்ணையனுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர் இதுபற்றி பவானி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது மர்மநபர்கள் 2 பேர் உள்ளே இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பவானி அருகே உள்ள சேர்வராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் வெங்கடேசன் (42), பவானி காவிரி நகர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் குமார் (30) ஆகியோர் என்பதும், அவர்கள் 2 பேரும் தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்கிருந்த மின்சார ஒயரை திருடியதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×