என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மடிப்பாக்கத்தில் கணவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்ற மனைவி
Byமாலை மலர்14 May 2021 6:39 AM GMT (Updated: 14 May 2021 6:39 AM GMT)
மடிப்பாக்கத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
மடிப்பாக்கம் கைவேலி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் பாண்டி.
இஸ்திரி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.
நேற்று மாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது திடீரென்று பாண்டி உடலில் தீப்பிடித்தபடி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவரிடம் போலீசார் விசாரித்தபோது, குடும்ப தகராறில் மனைவி தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்வதியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X