search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மடிப்பாக்கத்தில் கணவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்ற மனைவி

    மடிப்பாக்கத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் கைவேலி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் பாண்டி.

    இஸ்திரி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.

    நேற்று மாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது திடீரென்று பாண்டி உடலில் தீப்பிடித்தபடி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரித்தபோது, குடும்ப தகராறில் மனைவி தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்வதியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×