என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முழு ஊரடங்கில் கொரோனா தடுப்பு விதியை மீறியவர்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம்
Byமாலை மலர்11 May 2021 6:00 PM GMT (Updated: 11 May 2021 6:00 PM GMT)
வேலூர் மாநகராட்சி பகுதியில் முழுஊரடங்கை அமல்படுத்தவும், கொரோனா தடுப்பு விதியை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் முழுஊரடங்கை அமல்படுத்தவும், கொரோனா தடுப்பு விதியை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் 3-வது மண்டல உதவிகமிஷனர் வெங்கடேசன் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் ஊழியர்கள் நேற்று ஊரீசு பள்ளி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முககவசம் அணியாமல் வந்தவர்கள் மற்றும் தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மளிகை, காய்கறி, இறைச்சி, மீன், டீக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சி பகுதியில் முழுஊரடங்கின்போது முககவசம் அணியாத 96 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.19 ஆயிரத்து 200-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 46 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.23 ஆயிரத்து 500-ம் என்று மொத்தம் ரூ.42,200 அபராதம் விதிக்கப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் முழுஊரடங்கை அமல்படுத்தவும், கொரோனா தடுப்பு விதியை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் 3-வது மண்டல உதவிகமிஷனர் வெங்கடேசன் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் ஊழியர்கள் நேற்று ஊரீசு பள்ளி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முககவசம் அணியாமல் வந்தவர்கள் மற்றும் தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மளிகை, காய்கறி, இறைச்சி, மீன், டீக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சி பகுதியில் முழுஊரடங்கின்போது முககவசம் அணியாத 96 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.19 ஆயிரத்து 200-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 46 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.23 ஆயிரத்து 500-ம் என்று மொத்தம் ரூ.42,200 அபராதம் விதிக்கப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X