search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

    பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அம்மனேரி காந்தி மைதானம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய செம்படமுத்தூரை சேர்ந்த அப்பு (வயது 26), கந்தசாமி (51) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஓசூர் சிப்காட் போலீசார் மூக்கண்டப்பள்ளி என்.டி.ஆர். நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சூதாடிய மூக்கண்டப்பள்ளி ராமராஜன் (31), தனசேகரன் (32), வெங்கடாசலம் (57), பென்னாகரம் அகிலன் (30), தளி கோவிந்தன் (33) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல பாகலூர் போலீசார் மாரசந்திரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சூதாடிய நல்லூர் முரளி (35), மாரசந்திரம் சிவராமன் (27), அந்திவாடி சுதாகர் (26) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×