என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாமல்லபுரத்தில் திருட்டை தவிர்க்க டாஸ்மாக் கடைகளுக்கு ‘சீல்’
Byமாலை மலர்10 May 2021 2:35 PM GMT (Updated: 10 May 2021 2:35 PM GMT)
மர்ம நபர்கள் மூலம் மதுபாட்டில்கள் திருடு போகாத வகையில் மாமல்லபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இரும்பு கம்பி மூலம் வெல்டு வைத்து சீல் வைக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் படிப்படியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை்) முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
இந்த ஊரடங்கு நாட்களில் மதுகடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் அயல்நாட்டு மதுபான கடை மற்றும் பூஞ்சேரி, வடகடம்பாடி, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள 4 கடைகளில் நேற்று மாலை 6 மணி வரை மது விற்பனை களைகட்டியது. ஏராளமான மது பிரியர்கள் பெட்டி, பெட்டியாக தங்களுக்கு பிடித்த மது வகைகளை வாங்கி சென்றனர். விற்பனை நேரம் முடிந்து கடை மூடப்பட்ட பிறகு வந்த ஏராளமான மது பிரியர்கள் மது கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றதையும் காண முடிந்தது.
விற்பனை நேரம் முடிவடைந்த பிறகு அனைத்து டாஸ்மாக் கடைகளும் சீல் வைக்கப்பட்டன. ஊரடங்கு நாட்களில் மர்ம நபர்களால் மது பாட்டில்கள் கொள்ளை போகாத வண்ணம் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், குப்புசாமி ஆகியோர் மேற்பார்வையில் அனைத்து டாஸ்மாக் கடைகளின் கதவுகளை பூட்டி இரும்பு கம்பி மூலம் வெல்டு வைத்து சீல் வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X