என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொள்ளிடம் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
Byமாலை மலர்10 May 2021 2:24 PM GMT (Updated: 10 May 2021 2:24 PM GMT)
கொள்ளிடம் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு சுனாமி நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 44). இவர், நேற்று காலை அதே ஊரை சேர்ந்த 5 பேருடன் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.
இவர்கள் 6 பேரும் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடலில் படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் தத்தளித்தபடி மீனவர்கள் நீந்தி சென்று அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகில் ஏறி உயிர் தப்பினர். நடராஜன் மட்டும் கடலில் மாயமாகி விட்டார்.
உடனே அந்த படகில் இருந்த மீனவர்களின் ஒத்துழைப்புடன் தங்களுடன் மீன் பிடிக்க வந்த நடராஜனை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டனர். 3 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் நடராஜனை பிணமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து அவரது உடலை பழையாறு கடற்கரைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு சுனாமி நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 44). இவர், நேற்று காலை அதே ஊரை சேர்ந்த 5 பேருடன் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.
இவர்கள் 6 பேரும் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடலில் படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் தத்தளித்தபடி மீனவர்கள் நீந்தி சென்று அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகில் ஏறி உயிர் தப்பினர். நடராஜன் மட்டும் கடலில் மாயமாகி விட்டார்.
உடனே அந்த படகில் இருந்த மீனவர்களின் ஒத்துழைப்புடன் தங்களுடன் மீன் பிடிக்க வந்த நடராஜனை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டனர். 3 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் நடராஜனை பிணமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து அவரது உடலை பழையாறு கடற்கரைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X