என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.36.10 கோடி மது விற்பனை
Byமாலை மலர்10 May 2021 10:08 AM GMT (Updated: 10 May 2021 10:08 AM GMT)
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.13 கோடியே 85 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்று தீர்ந்தன.
வேலூர்:
கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதை அறிந்த மதுபிரியர்கள் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். கடைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருந்தன.
காலை முதலே டாஸ்மாக் கடைகள் முன்பு மதுபிரியர்கள் குவிந்து தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கிச் சென்றனர். பலர் பெட்டி, பெட்டியாக வாங்கிச் செல்வதை காணமுடிந்தது.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.13 கோடியே 85 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்று தீர்ந்தன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.6 கோடியே 30 லட்சம் மது பீர் வகைகள் விற்பனையானது. நேற்று வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.8 கோடியே 95 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையானது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.7 கோடிக்கு மதுபானங்கள் விற்று தீர்ந்தன.
கடந்த 2 நாளில் 3 மாவட்டங்களிலும் சேர்த்து ரூ.36 கோடியே 10 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதை அறிந்த மதுபிரியர்கள் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். கடைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருந்தன.
காலை முதலே டாஸ்மாக் கடைகள் முன்பு மதுபிரியர்கள் குவிந்து தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கிச் சென்றனர். பலர் பெட்டி, பெட்டியாக வாங்கிச் செல்வதை காணமுடிந்தது.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.13 கோடியே 85 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்று தீர்ந்தன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.6 கோடியே 30 லட்சம் மது பீர் வகைகள் விற்பனையானது. நேற்று வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.8 கோடியே 95 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையானது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.7 கோடிக்கு மதுபானங்கள் விற்று தீர்ந்தன.
கடந்த 2 நாளில் 3 மாவட்டங்களிலும் சேர்த்து ரூ.36 கோடியே 10 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X