search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம்
    X
    மதுபானம்

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.36.10 கோடி மது விற்பனை

    வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.13 கோடியே 85 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்று தீர்ந்தன.
    வேலூர்:

    கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதை அறிந்த மதுபிரியர்கள் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். கடைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருந்தன.

    காலை முதலே டாஸ்மாக் கடைகள் முன்பு மதுபிரியர்கள் குவிந்து தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கிச் சென்றனர். பலர் பெட்டி, பெட்டியாக வாங்கிச் செல்வதை காணமுடிந்தது.

    வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.13 கோடியே 85 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்று தீர்ந்தன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.6 கோடியே 30 லட்சம் மது பீர் வகைகள் விற்பனையானது. நேற்று வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.8 கோடியே 95 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையானது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.7 கோடிக்கு மதுபானங்கள் விற்று தீர்ந்தன.

    கடந்த 2 நாளில் 3 மாவட்டங்களிலும் சேர்த்து ரூ.36 கோடியே 10 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

    Next Story
    ×