என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவல்துறையை கலங்கடிக்கும் தொற்று- மேலும் 19 போலீசாருக்கு கொரோனா
Byமாலை மலர்10 May 2021 2:35 AM GMT (Updated: 10 May 2021 2:35 AM GMT)
போலீசாருக்கு கொரோனா பரவி வருவதை தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார் மனு வாங்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
இந்த நிலையில் நேற்று மேலும் 19 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது. காவல்துறையிலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே போலீசாருக்கு கொரோனா பரவி வருவதை தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார் மனு வாங்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையம் முன்பு பந்தல் அமைத்து போலீஸ்காரர்கள் புகார் மனு பெறுகின்றனர்.
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு ஆட்சியாளர்கள், அரசியல் கட்சியினர், அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புதுவையில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு கடந்த 28-ந் தேதி போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 107 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் நாள்தோறும் போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரை 171 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மேலும் 19 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது. காவல்துறையிலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே போலீசாருக்கு கொரோனா பரவி வருவதை தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார் மனு வாங்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையம் முன்பு பந்தல் அமைத்து போலீஸ்காரர்கள் புகார் மனு பெறுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X