என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்திற்கு இன்று 7.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தன
Byமாலை மலர்9 May 2021 3:48 PM GMT (Updated: 9 May 2021 3:48 PM GMT)
தடுப்பூசி பணியை அரசு துரிதப்படுத்தி வரும் நிலையில், இன்று தமிழகத்திற்கு மேலும் 7.5 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கு கொண்டு வருகிறது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒருபக்கம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று 7.5 லட்சம் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்துள்ளன. முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தியிருந்தார்.
தமிழகத்தில் இதுவரை கோ-வின் இணைய தளம் தகவல்படி முதல் டோஸ் 49,05,213 பேருக்கும், 2-வது டோஸ் 16,63,028 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 2,740 மையங்களில் (அரசு 2,610, தனியார் 130) தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X