search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    தாம்பரம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

    தாம்பரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர், சத்தியமூர்த்தி சாலையை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி காயத்ரி (36). இவர், நேற்று மதியம் அவரது வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் காயத்ரி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×