என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழடியில் பழங்கால தங்க ஆபரணம் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்1 May 2021 3:06 AM GMT (Updated: 1 May 2021 3:06 AM GMT)
கீழடியில் அகழ்வாராய்ச்சி பணியின்போது காதில் அணியும் பழங்கால தங்க வளைய ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. கொந்தகை, அகரம் ஆகிய பகுதியிலும் அகழாய்வு பணிகள் நடந்தது. கீழடியில் பாசி, மணிகள், தாயக்கட்டை கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் மற்றும் மனித மண்டை ஓடுகள், எலும்புகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டன.
அகரத்தில் 2 குழிகள் தோண்டப்பட்டு மண்பாண்ட ஓடுகள், சிறிய, பெரிய நத்தை கூடுகள், சேதமடைந்த பானைகள் என கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 3-வது குழி தோண்டப்பட்டது. அந்த குழியில் சேதமடைந்த நிலையில் 3 பானைகள் தொடர்ச்சியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கீழடியில் நேற்று அகழ்வாராய்ச்சி பணியின் போது காதில் அணியும் பழங்கால தங்க வளைய ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வளையத்தை நீட்டினால் 4.5 செ.மீ. நீளமும், வளையமாக இருந்தால் 1.99 செ.மீ. விட்டமாக உள்ளது எனவும் தெரிய வருகிறது. இதை ஆய்வுக்கு அனுப்பினால் தான் எந்த காலத்தில் பயன்படுத்தியது என தெரிய வரும்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. கொந்தகை, அகரம் ஆகிய பகுதியிலும் அகழாய்வு பணிகள் நடந்தது. கீழடியில் பாசி, மணிகள், தாயக்கட்டை கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் மற்றும் மனித மண்டை ஓடுகள், எலும்புகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டன.
அகரத்தில் 2 குழிகள் தோண்டப்பட்டு மண்பாண்ட ஓடுகள், சிறிய, பெரிய நத்தை கூடுகள், சேதமடைந்த பானைகள் என கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 3-வது குழி தோண்டப்பட்டது. அந்த குழியில் சேதமடைந்த நிலையில் 3 பானைகள் தொடர்ச்சியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கீழடியில் நேற்று அகழ்வாராய்ச்சி பணியின் போது காதில் அணியும் பழங்கால தங்க வளைய ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வளையத்தை நீட்டினால் 4.5 செ.மீ. நீளமும், வளையமாக இருந்தால் 1.99 செ.மீ. விட்டமாக உள்ளது எனவும் தெரிய வருகிறது. இதை ஆய்வுக்கு அனுப்பினால் தான் எந்த காலத்தில் பயன்படுத்தியது என தெரிய வரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X