search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா பாதிப்பால் புதுவையில் நாள்தோறும் சராசரியாக 10 பேர் உயிரிழப்பு

    புதுவையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா கோரதாண்டவம் ஆட தொடங்கியுள்ளது.

    நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    புதுவையில் ஜிப்மர், அரசு மருத்துவக்கல்லூரி, 7 தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் உள்ளது. தேவையான மருத்துவ கட்டமைப்புகள், மருத்துவ பணியாளர்கள் இருந்தும் கொரோனா தொற்று உயிரிழப்பு அதிகரித்து வருவது வேதனையாக உள்ளது.

    கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை 124 பேர் இறந்துள்ளனர். ஏப்ரல் மாத தொடக்கத்தில் நாள்தோறும் ஒருவர் அல்லது 2 பேர் என இறந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக சராசரியாக 10 பேர் இறக்கின்றனர்.

    முதல் அலையின்போது வயதானவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஆனால் 2-வது அலையில் 25 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டோர் அதிகளவில் இறக்கின்றனர்.

    மருத்துவ அறிக்கையில் நிமோனியா ஏற்பட்டு இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் உள்ளவர்கள் தொற்று அதிகரித்து கடைசி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்பேது சிகிச்சை பலனின்றி இறக்கின்றனர்.

    கடந்த ஆண்டு உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கான காரணம், சுகாதார பணியாளர்கள் கவனிப்பு குறித்து தனிப்பட்ட முறையில் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தும்.

    தற்போது எந்தவித விசாரணையும் நடக்கவில்லை. வீட்டு தனிமையில் உள்ளவர்களை சுகாதார பணியாளர்கள் நேரில் சென்று விசாரிப்பதும் இல்லை. அரசு சார்பில் ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் எந்த மருத்துவமனையிலும் நோயாளிகளுக்கு படுக்கைகள் வழங்கப்படுவது கிடையாது. இதனால்தான் சிகிச்சை பலனின்றி நாள்தோறும் 10 பேர் உயிரிழந்து வருகின்றனர்.


    Next Story
    ×