search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    ஓட்டு எண்ணிக்கை நாளில் பட்டாசு வெடிக்க, வெற்றி ஊர்வலத்துக்கு தடை- ஐகோர்ட் உத்தரவு

    சென்னை ஐகோர்ட்டு ஓட்டு எண்ணிக்கை அன்று கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நாளை மறுநாள் (மே 2-ந் தேதி) ஓட்டு எண்ணிக்கையின்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே அறிவுரை வழங்கி உள்ளது.

    உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து தேர்தல் ஆணையம் ஓட்டு எண்ணிக்கை அன்று வெற்றி கொண்டாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்

    ஓட்டு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு ஓட்டு எண்ணிக்கை அன்று கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அன்று தொண்டர்களை தலைவர்கள் கட்டுக்குள் வைத்து முன் உதாரணமாக திகழ வேண்டும்.

    அன்று பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. வெற்றி கொண்டாட்டங்கள், ஊர்வலங்களையும் நடத்தக்கூடாது.

    ஓட்டு எண்ணிக்கை தினத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.

    இவ்வாறு ஐகோர்ட்டு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×