search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆன்லைன் வகுப்பு
    X
    ஆன்லைன் வகுப்பு

    புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரி காலவரையின்றி மூடல்- ஆன்லைனில் வகுப்புகள் நடத்த முடிவு

    அனைத்து மாணவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் கவனமாக இருக்க வேண்டும். தடுப்பூசி போடாத மாணவர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று அதி தீவிரமாக பரவி வருகிறது.

    தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிது. புதுவை பல்கலைக்கழகம் மூடப்பட்டு மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியும் தேதி குறிப்பிடப்படாமல் மூடப்படுகிறது.

    வருகிற 3-ந்தேதி தேதி முதல் எம்.பி.பி.எஸ்., பி.எஸ்.சி. நர்சிங், பொது சுகாதாரம் உள்ளிட்ட மருத்துவ இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள் வீட்டிலிருந்தே வகுப்புகளில் பங்கேற்கலாம். விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் கருத்தரங்கு கூடத்தில் நடக்கும் வகுப்பில் பங்கேற்கலாம். விடுதி மாணவர்கள் வீட்டுக்கு செல்ல விரும்பினால் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு எழுத காத்திருக்கும் இறுதியாண்டு மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம். புதுவையிலேயே தங்கியிருக்க வேண்டும்.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செய்முறை தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். அனைத்து மாணவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் கவனமாக இருக்க வேண்டும். தடுப்பூசி போடாத மாணவர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். விடுதியிலிருந்து செல்லும் மாணவர்கள் கல்லூரி அறிவிப்புக்கு முன்பு மீண்டும் வரக்கூடாது. துறை தலைவர்கள் ஆன்லைன் வகுப்புகள், செய்முறை பயிற்சிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    வருகிற 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 2 வாரங்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை ஜிப்மர் டீன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×