search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மயிலாடுதுறை அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

    மயிலாடுதுறை அருகே 17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி உடல்நிலை சரியில்லை என்று மயிலாடுதுறை அரசு மருத்துமனையில் சேர்ந்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவி 9 வார கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். 

    இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இதற்கு காரணமானவர் ஆக்கூர் தெற்கு தெருவை சேர்ந்த பவுன்ராஜ் (வயது 21) என்பது தெரிய வந்தது. 

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பவுன்ராஜை கைது செய்தனர்.
    Next Story
    ×