search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    புதுவையில் வேட்பாளர், ஏஜெண்டுகள் 84 பேருக்கு கொரோனா

    முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 30 பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் வேட்பாளர்கள், ஏஜெண்டுகள், அரசு அதிகாரிகள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் ஆகியோருக்கான கொரோனா பரிசோதனை முகாம் புதுவையில் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட 8 மையங்களில் தொடங்கியது.

    இந்த முகாமில் ஆயிரத்து 546 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் என 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 30 பேருக்கு மேல் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

    அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகளை வருகிற 1-ந்தேதி மதியத்திற்குள் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×