search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் - புதுச்சேரியில் 107 போலீசாருக்கு கொரோனா

    புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வீரியமாக உள்ளது. தேர்தல் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2 நாட்களில் மட்டும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஆண், பெண் போலீஸ்காரர்கள் என 107 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×